ஞாயிறு, 16 மார்ச், 2014

7. கோடிகள் எங்கோ அடைக்கலமாக.....

கோடிகள் எங்கோ அடைக்கலமாக.....

பரங்கி மலை வருவாய் வட்ட எல்லையில் அரசு நிலத்தை மாத்யூஸ் என்பவர் வளைத்துப் போட்டிருந்தார்; அந்த இடத்தை,
ரூ.25 இலட்சங்கள் என விலை நிர்ணயம் செய்து அசைன்மெண்ட் பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்தச்
சிபாரிசு! மாவட்ட ஆட்சியர் சுகுமாறன் அந்தக் கோப்பை மாவட்ட வருவாய் அதிகாரியான சகாயத்துக்கு அனுப்பி ஆவன‌
செய்யக் கேட்டிருந்தார்.  அதிகாரி சகாயம் உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே என்று கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிட்டு
காரியத்தை முடித்துகொடுப்பவர் இல்லையே!

பரங்கி மலையில் குறிப்பிட்ட இடத்தைப் போய் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த அதிகாரியான சகாயம் அதிர்ந்துபோனார்.
நாற்பது இலட்சங்கள் என்றால் கூட பரவாயில்லை! நாலுகோடி பெறுமானமுள்ள இடம் என்பதை ஆய்வில் கண்டறிந்தார்.

கோடிகள் எங்கோ அடைக்கலமாக அரசு நிலத்தை முறைகேடாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் அனுபவிப்பவருக்கு பட்டாப்
போட்டுக்கொடுக்க சகாயத்தின் நேர்மை அணுவளவும் இடம் கொடுக்கவில்லை.  கோடிக் கணக்கில் அந்த இடத்தின் மதிப்பீடு
இருக்கும்போது தம்மால் 25 இலட்சங்கள் அரசு விலை என்று நிர்ணயித்து பட்டா வழங்க இயலாது என்று திட்டவட்டமாக எழுதி
கோப்பைத் திருப்பி அனுப்பிவிட்டார், சகாயம். இதனால் முதல்வரின் கூடுதல் செயலர் இராசமாணிக்கத்தின் கடும் கோபத்துக்கு
ஆளானார் சகாயம்!

எல் அண்ட் டி என்ற பிரபல நிறுவனம்.  இந்த நிறுவனம் சுங்குவார் சத்திரத்தின் அருகேயுள்ள நீர்வடு என்ற கிரமத்தில் இருந்த‌
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருந்தது.  சகாயம், நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்த இடத்தைப் பார்வையிட்டார். எல் அண்ட் டி
நிறுவனம் சகாயத்தை மிரட்டோ மிரட்டு என்று மிரட்டியது. சகாயத்தை இந்த இடத்திலிருந்து தூக்கிக் காட்டுகிறோம் என்று சவால் விட்டது; எதற்கும் கவலை கொள்ளாத சகாயம் இதற்கெல்லாமா கவலைப்படுவார்.  இந்த நிறுவனம் ஆக்கிரமித்திருந்த  நிலத்தை ஆய்வு மேற்கொண்டு அந்த நிறுவனத்திடமிருந்து 1.5ஏக்கர் நிலத்தை நிறுவனப் பிடியிலிருந்து மீட்டார், சகாயம்.

பத்தாயிரம் பட்டாக்கள் பைசா செலவில்லாமல்.....

நீண்ட வருடங்களாக அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசித்துவரும் ஏழை மற்றும் நடுத்தரவாசிகளுக்கு இலவசப் பட்டா
வழங்கலாம் என்று அரசு அறிவித்திருந்த திட்டத்தில் காசு பார்க்க நினைத்த அதிகாரிகள் குறித்த தகவல் சகாயத்தின் காதில்
விழுந்தது. 

ஏழை எளியவர்களுக்கு பைசா செலவில்லாமல் பட்டா சென்றடைய வேண்டும் எண்ணிய சகாயம் தானே முன்னின்று
கையெழுத்திட்டு பத்தாயிரம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பைசா செலவில்லாமல் இலவச பட்டாக்களை வழங்கினார்.
இலவச பட்டா வழங்குவதில் காசு பார்க்க நினைத்த அலுவலர்களின் நினைப்பில் "மண்"விழக் காரணமானார், சகாயம்! ஆனால்
பத்தாயிரம் ஏழை எளிய குடும்பங்கள் இதயம் குளிர வாழ்த்தினார்கள் என்ற பெருமை சகாயத்துக்கே என்பது சகாயம் மாற்றப்பட்ட‌
அந்த நாளில் தெரிந்தது!

இப்படி அடிக்கடி கிராமப் பக்கங்களுக்கு போகும்போது அங்குள்ள கிராமத்தினரைச் சந்தித்துகுறைகள் இருக்கிறதா? அரசு அதிகாரிகள் வருகிறார்களா? பிரச்னைகள் ஏதும் உள்ளதா?என்றெல்லாம் விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், சகாயம்.

கிராமங்களில் தங்கி இருக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்காததால்கிராமங்களில் சில பிரச்னைகள் விசுவரூபமெடுத்துவிடுகிறது.  அதனைத் தீர்க்கவேண்டிய‌ உடனடி அலுவலராக கிராம நிர்வாக அலுவலர்கள் கருதப்படக்கூடியவர்கள்.  பள்ளிப்பிள்ளைகளுக்குசாதிச் சான்று, வருமானச் சான்று வேண்டுமானால் அதற்கு இவர்கள் முதலில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தால்தான் வட்டாட்சியர் அலுவலகத்துக்கே போகமுடியும்.

விவசாயிகள்வங்கிக்கடன் வேண்டும் என்று போகும்போது அவர்கள் பட்டா,சிட்டா என்று பலதேவைகள்ஏற்படும்போது அதனைக் கொடுக்கிற பொறுப்பு இவர்களுக்கு உண்டு. திடீர் என ஒரு வழக்கில்பிணை பெற வேண்டிய சூழல் என்றால் அதற்கும் இவரே சான்று அளிக்க வேண்டிய‌அலுவலராக இருக்கிறார்.  இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் உள்ளவர்கிராமத்தில் தங்கி இருக்கவேண்டும் என்பது அரசின் உத்திரவும் கூட! ஆனால் இவர்கள்கிராமங்களில் வசிப்பதில்லை என்பதை சகாயம் கிராமங்களுக்குச் சென்ற போது பொதுமக்கள் அளிக்கின்ற புகாரிலிருந்து தெரிந்து கொண்டார்.

இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கிப் பணிபுரியவேண்டும்என்பதில் கண்டிப்பாக இருந்தார், சகாயம்.

ஒரு நாள் அதிகாலையில் திண்டுக்கல்லில் கலெக்டாராக இருந்தவரிடமிருந்து ஒருதொலைபேசி அழைப்பு சகாயத்துக்கு வருகிறது.  தனது உறவினர்கள் சென்ற வாகனம்விபத்துக்குள்ளாகி நாமக்கல் அருகே மூன்று நான்கு பேர்கள் அந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டதாகவும், அதற்காக தாம் அங்கு வருவதாகச் சொல்கிறார்.

நடந்த விபத்து,முதல் நாள் நள்ளிரவில் நடந்தது. அந்தக்கிராமத்தில் கிராமநிர்வாக‌ அலுவலர் தங்கியிருந்தால் உடனே இந்த விபத்து குறித்து ஆட்சியருக்குத் தெரிய‌வந்திருக்கும். அவர் அங்கு தங்காததால் அடுத்த மாவட்ட ஆட்சியர் கூப்பிட்டுச்சொன்ன பிறகே அப்படி ஒரு சம்பவம் நடந்தது தனக்குத் தெரிய வருகிறதுஎன்பதில் சகாயம் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கி பரிபாலனம்செய்வதில்லை என்ற அதிருப்தியில் இருந்தார், சகாயம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக